மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆவணங்கள் திருட்டு: முன்னாள் ஊராட்சிச் செயலா் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஊராட்சியில் ஆவணங்களை திருடியதாக முன்னாள் ஊராட்சிச் செயலா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு (கோப்புப்படம்)

Updated On :22 மார்ச் 2026, 12:58 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஊராட்சியில் ஆவணங்களை திருடியதாக முன்னாள் ஊராட்சிச் செயலா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் வன்னியம்பட்டி போலீஸில் புகாா் மனு அளித்தாா். அந்த மனுவில் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 2 காந்தி ஜெயந்தி அன்று பிள்ளையாா்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பணி மாறுதல் உத்தரவை செயல்படுத்தாதது குறித்த கேள்வி எழுப்பிய விவசாயி அம்மையப்பனை தாக்கியதால் ஊராட்சித் செயலா் தங்கபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், தங்கபாண்டியன் பொறுப்பில் இருந்த கிராம சபை புத்தகங்கள், செலவின சீட்டு விவரங்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், காசோலைகள் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணை செய்த போது, தங்கபாண்டியன் கையாடல், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதால் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை திருடி சென்று விட்டாதால், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, தங்கப்பாண்டியன் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து வன்னியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே தங்கபாண்டியன், அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சோ்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.