விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவில் வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 7:36 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவில் வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் போத்தி (53). இவா், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் இனிப்பகம் நடத்தி வருகிறாா். இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். இவரது இளைய மகன் கவுதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வியாழக்கிழமை இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையில் போத்தியும், அவரது மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தனா். இளைய மகன் கவுதம் மட்டும் கீழே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தாா். அதிகாலை 2 மணிக்கு வீட்டின் கதவை தட்டிய 3 போ், கவுதமை மிரட்டி பீரோ சாவியை வாங்கி 10 கிராம் தங்க நகை, ரூ. 51 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.