திரிபுராவில் மூன்றாவது முறை முதல்வராகப் பதவி வகித்தபோது, மாணிக் சர்காரின் சொத்து மதிப்பு ரூ.13,500 மட்டும்தான். அவருக்கு கிடைத்த மாத ஊதியம் ரூ.9,200; படிகள் ரூ.1,200. இவற்றை தான்சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கே கொடுத்துவிடுவார். இவரின் மனைவி மத்திய சமூக நலத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவியின் ஓய்வூதியத்தில்தான் குடும்பம் நடந்தது.
முதல்வராக இருந்தபோது, அவர் தனது மனைவியும் வெளியே செல்லும்போது அரசு காரை பயன்படுத்த மாட்டார். எந்தப் பாதுகாவலரும் இன்றி ரிக்ஷாவில்தான் செல்வார்.