ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உழைப்பே உங்கள் இலக்கு!

 ஹாக்கி விளையாட்டில் நான் எடுத்துக் கொண்ட விடாமுயற்சியும், கடின உழைப்புமே பத்ம ஸ்ரீ மற்றும் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் பெற காரணமாகும் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன்

News image
Updated On :2 டிசம்பர் 2021, 1:28 pm

பூா்ணிமா

ஹாக்கி விளையாட்டில் நான் எடுத்துக் கொண்ட விடாமுயற்சியும், கடின உழைப்புமே பத்ம ஸ்ரீ மற்றும் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் பெற காரணமாகும் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ( 26) கூறியுள்ளார்.

""கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதுகள் பொதுமுடக்கம் காரணமாக இந்த ஆண்டு விழாவின்போது வழங்கப்பட்டது. தொடர்ந்து பத்து நாள்களுக்குள் கேல் ரத்னா விருதையும் பெற்றது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாக அமைந்துவிட்டது. நாட்டின் பெருமைக்குரிய இந்த விருதுகளைப் பெறுவதற்கு என்னுடைய கடினமான விடாமுயற்சியும், உழைப்பும் காரணமாகும்.

இந்த விருதுகள் நான் விளையாடத் தொடங்கிய சில ஆண்டுகளுக்குள் கிடைத்துவிடவில்லை. 20 ஆண்டுகள் தொடர்ந்து ஆடி வந்ததால் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ஆன பின்னர் அரசால் என்னுடைய திறமை அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டதாகும்.

ஹரியானாவில் உள்ள கிராமமொன்றில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான், சிறுவயதிலேயே ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்டு பயிற்சிப் பெற்று விளையாடத் தொடங்கினேன். அப்போது எதிர்காலத்தில் நான் ஹாக்கியில் முன்னேறி, இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ஆவேன் என்றோ, விருதுகள் பெறுவேன் என்றோ நினைக்கவே இல்லை. என்னுடைய முயற்சிக்கு பெற்றோரும், பயிற்சியாளர்களும், சக விளையாட்டு வீராங்கனைகளும் கொடுத்த ஒத்துழைப்புமே நான் சிறந்த வீராங்கனையாக உயர உதவியது.

சாதாரண கிராமத்துப் பெண்ணான நான், இந்த உயர்ந்த விருதுகளை என் பெற்றோருடன் சென்று, குடியரசு தலைவர் கையால் பெற்றபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கடந்த ஆண்டுகளில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்களால்தான் இந்தப் பெருமை கிடைத்துள்ளது. பெண்கள் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

விளையாட்டுத் துறையில் ஈடுபட விரும்பும் இளம் பருவத்தினர் கடினமான முயற்சியை மேற்கொண்டால் மட்டுமே சிறந்த வீரர்களாகவோ, வீராங்கனைகளாகவோ உயர முடியும். இந்தத் துறையில் வெற்றி தோல்வியைப்போல் ஏற்ற இறக்கங்களும் தொடர்ந்து இருக்கும். இதை உணர்ந்து ஆடும்போது கிடைக்கும் வரவேற்பும், ஆதரவும் உங்கள் இலக்கை அடைய உதவும்'' என்கிறார் ராணி ராம்பால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.