இந்திராகாந்தியாக லாரா தத்தா!
1984 - ஆம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்திக்கு எதிராக காலிஸ்தான் பிரிவினைவாதிகள் நடத்திய விமான கடத்தல் சம்பவம் பற்றிய உண்மையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும்


1984-ஆம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்திக்கு எதிராக காலிஸ்தான் பிரிவினைவாதிகள் நடத்திய விமான கடத்தல் சம்பவம் பற்றிய உண்மையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் "பெல்பாட்டம் என்ற படத்தில் ரா அமைப்பு ஏஜென்ட்டாக நடிக்கும் எங்கள் குடும்ப நண்பரும், நடிகருமான அக்ஷய்குமார், என்னிடம் வந்து இந்த படத்தில் இந்திராகாந்தியாக நடிக்க சம்மதமா? என்று கேட்டபோது, ஏதோ விளையாட்டுக்காக கேட்கிறார் என்று நினைத்து மறுத்துவிட்டேன். பின்னர் என்னிடம் பலமுறை பேசி சம்மதிக்க வைத்தார்.
இந்திராகாந்தி போல் மேக்கப் செய்து முடித்தபோது, என் தோற்றத்தைக் கண்டு என்னாலேயே நம்ப முடியவில்லை. என் கணவர் மகேஷ் பூபதியால் கூட அடையாளம் காண முடியவில்லை. விங் கமாண்டராக இருந்து ஓய்வு பெற்ற என்னுடைய தந்தை எல்.கே.தத் பலமுறை இந்திரா காந்தியுடன் விமானத்தில் பயணம் செய்திருந்ததால் அவர் கொடுத்த தகவல்களை வைத்து இந்திராகாந்தி போல் நடித்தது எனக்கொரு புது அனுபவம் என்கிறார் முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான லாராதத்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...