மாசியில் மா பூத்து, சித்திரை மாதத்தில் கனி விளைவு தருவதால் மாங்கனிக்கு "சித்திரைக்கனி' என்றொரு சிறப்புப் பெயர். தமிழ்ப் புத்தாண்டில் பிறக்கும் சித்திரை மாதத்தில், மாங்கனி கிடைப்பதால் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளில் மாங்கனி முதலிடம் பெற்றது.
திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் சாகுபடியாகும் பாரம்பரியமிக்க நெல் வகைகளில் "சித்திரைக்கா' நெல் முக்கியமானது. இந்த நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி நல்ல வெள்ளை நிறம் கொண்டது. சாதம், பண்டம், பலகாரங்கள் செய்ய ஏற்றது. புரதம், வைட்டமின் பி, சத்துகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.