தேவையான பொருள்கள்:
பசலைக் கீரை- அரை கட்டு
கோதுமை மாவு- அரை கிலோ
பெரிய வெங்காயம்- 1
பச்சை மிளகாய்-5
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு, தேங்காய்த் துருவல்- 2 தேக்கரண்டி
செய்முறை:
பசலைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்துள்ள பசலைக் கீரையைப் போட்டு நன்றாக வதக்கி இறக்கவும். ஆறியவுடன் தேவையான அளவு உப்பு, எலுமிச்சைப் பழச் சாறு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாகக் கெட்டியாக அரைக்கவும். இந்த அரைத்த விழுதை கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சப்பாத்திகளாகச் சுட்டு சாப்பிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.