தேவையான பொருள்கள்:
பால் - 1 லிட்டர்
வினிகர் - 2 தேக்கரண்டி
பொடித்த சர்க்கரை - கால் கிண்ணம்
ஃபுட் கலர் (ரோஸ்) - 1 சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்
தேங்காய் - ஒரு பெரிய மூடி
சர்க்கரை - அரை கிண்ணம்
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை:
பாலை கொதிக்கவிட்டு, வினிகரை சிறிது சிறிதாகச் சேர்த்து, நன்கு திரிந்ததும் வடிகட்டினால், பனீர் கிடைக்கும். பனீருடன் பொடித்த சர்க்கரை, ஃபுட் கலர், எசன்ஸ் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள். தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். தேங்காயுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறுங்கள்.
சர்க்கரை உருகி, இளகி திரும்ப சற்று சேர்ந்தாற்போல் வரும்போது இறக்கிவிட வேண்டும். அதில் ஏலக்காய்த் தூளைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். ஆறியவுடன் சிறிதளவு எடுத்து உருட்டி, கிண்ணம்போல் செய்து, அதனுள் பனீர் உருண்டை களை வைத்து, நன்கு மூடி உருட்டுங்கள். ஃப்ரிஜ்ஜில் குளிரவைத்து, பரிமாறுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமையல்... சமையல்...: வடாம் வகைகள்!
ஹோம்மேட் சாக்லேட் ஐஸ் கிரீம்
இளநீர் பாயசம்
பலாக்கொட்டை கோலா உருண்டை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



