சமையல் குறிப்புகள்...

பகோடா செய்யும்போது, சிறிது நெய், உப்பு போட்ட தயிரை கலந்துகொண்டால், மொறுமொறுப்பாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்...
Picasa
Published on
Updated on
1 min read

விமலா சடையப்பன்

பகோடா செய்யும்போது, சிறிது நெய், உப்பு போட்ட தயிரை கலந்துகொண்டால், மொறுமொறுப்பாக இருக்கும்.

சாம்பாரை இறக்கும் முன்பு 1 தேக்கரண்டி கடலைப் பருப்பு, 1 தேக்கரண்டி வரமல்லி, ஒரு வரமிளகாய் வறுத்து அரைத்து கலக்கினால், சுவையாக இருக்கும்.

ஒரு பெரிய முழு நெல்லிக்காயை வறுத்து பருப்பு மற்ற சாமான்களோடு வதக்கி, துவையல் அரைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

தயிர் உறைய வைக்கும்போது, மண்சட்டியில் உறைய விடவும். கெட்டியாக உறைவதுடன் எளிதில் புளிக்காது.

ரசம் இறக்கியதும் ஒரு துளி நெய் சேர்த்து பச்சை கொத்தல்லியை மிதக்கவிட்டால், ரசம் மணமணக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com