பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வெங்காய பிரியாணி

அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.

Published On :

தேவையானவை:

பாசுமதி அரிசி- 250 கிராம்

வெங்காயம்- 2 (பொடியாக நறுக்கவும்)

மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி

எண்ணெய்- 3 தேக்கரண்டி

நெய்- 2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

அரைக்க:

மிளகாய்த் தூள்- அரை தேக்கரண்டி

தனியாத் தூள்- ஒரு தேக்கரண்டி

இஞ்சி, பட்டை- தலா 1 துண்டு

கிராம்பு, ஏலக்காய்- தலா 2

பூண்டு- 10 பல்

செய்முறை:

அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். பின்னர் அரைத்த விழுதை நன்றாக வதக்கி, இரண்டு கிண்ணம் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அரிசியைச் சேர்த்து வெந்ததும் இறக்கி, பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.