நகைகளைப் பராமரிக்கும் முறைகள்!

தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும், சுப காரியங்கள் முதல் அனைத்து விசேஷங்களுக்கும் நகை வாங்குவோம்.
நகை
நகை
Published on
Updated on
1 min read

தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும், சுப காரியங்கள் முதல் அனைத்து விசேஷங்களுக்கும் நகை வாங்குவோம். அந்த நகைகளைச் சுத்தமாகவும் நீண்ட நாள்களுக்குப் புதிது போல் எப்படி பராமரிப்பது தெரியுமா?

அன்றாடம் அணியும் செயின், தோடு, மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்திருக்கும். இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தரமான ஷாம்பு அல்லது சோப்புத் தூளால் தேய்த்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

எப்போதாவது ஒருமுறை அணியும் ஆரம், நெக்லஸ், கல் வளையல் போன்ற நகைகளை ஒன்றோடு ஒன்று உரசாமலும், வளையாமலும் அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நகைப் பெட்டிகளில் தனித்தனியாக வைத்துகொள்ளுங்கள்.

வெள்ளி ஆபரணங்கள் வைத்துள்ள இடத்தில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால், வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தவிர்க்கலாம். மேலும், அதனை அலுமினியப் பாத்திரத்தில் நீரை கொதிக்கவிட்டு, அதில் வெள்ளி நகைகளை போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துத் துடைத்தால் அழுக்குகள் நீங்கி விடும்.

முத்துகள் பதித்த நகைகளை நீரில் அழுத்தி தேய்த்து கழுவக்கூடாது. மேலும், முத்து நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும்.

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், கோடம்பாக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com