சாம்பார் வடாம்
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு, வெள்ளைக் கடலை- தலா 100 கிராம்
சாம்பார் வெங்காயம்- 200 கிராம்
காய்ந்த மிளகாய்- 10
கொத்தமல்லி இலை- 1 கட்டு
உப்பு- தேவையான அளவு
செய்முறை: முதல்நாள் வெள்ளைக் கடலையை தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் கடலையின் தோலை அகற்றி, துவரம் பருப்புடன் சேர்த்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். வெங்காயம், கொத்தமல்லி இலைகளைப் பொடியாக நறுக்கவும். மிளகாய், உப்பு இரண்டையும் வெண்ணெய்யாக அரைத்தவுடன் ஊறவைத்த பருப்பையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த விழுதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, நன்றாகக் கலக்க வேண்டும். ஒரு வெள்ளைத் துணியை மொட்டை மாடி தரையில் விரித்து துணியில் மீது வடை மாதிரி தட்டி, வெயிலில் நன்றாகக் காயவைத்து எடுக்க வேண்டும். தேவையானபோது, எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து, சாம்பாரில் சுவை மேலும் கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.