காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இறைவன் கொடுத்த வரம்!

ஓர் ஊரில் ஒரு காகம் இருந்தது. அதற்கு உணவுக்குப் பஞ்சமில்லை. கூடு கட்டி வாழ மரங்களுக்கும் பஞ்சமில்லை. அன்பு மிகுந்த சுற்றமும் நட்பும் இருந்தது. சந்தோஷமாக வாழ்ந்து வந்தது.

News image
Updated On :31 அக்டோபர் 2020, 12:30 am

மயிலை மாதவன்

ஓர் ஊரில் ஒரு காகம் இருந்தது. அதற்கு உணவுக்குப் பஞ்சமில்லை. கூடு கட்டி வாழ மரங்களுக்கும் பஞ்சமில்லை. அன்பு மிகுந்த சுற்றமும் நட்பும் இருந்தது. சந்தோஷமாக வாழ்ந்து வந்தது.

அந்தக் காகம் ஒரு நாள் கொக்கைப் பார்த்தது. அதன் வெண்மை நிறத்தைப் பார்த்து வியந்தது! தன் நிறம் கறுப்பாக இருக்கிறதே என்று வருத்தப்பட்டது!

""நீ கொடுத்து வைத்தவன்!... வெள்ளையாய் அழகாக இருக்கிறாய்!.... '' என்று கொக்கைப் பார்த்துப் புகழந்தது.

""வெண்மை என்ன வெண்மை?....  நான் ஒரு நாள் கிளியைப் பார்த்தேன்!......

அதன் பச்சை நிறம் என் கண்ணைப் பறித்தது!.... நான் பச்சையாக இல்லையே என்று வருந்,திக்கொண்டு இருக்கிறேனாக்கும்!'' என்றது கொக்கு.
இவை இரண்டும் பறந்து போய் கிளியைச் சந்தித்தன. கிளியின் நிறத்தைப் பாராட்டின! 

கிளியோ, ""நான் ஒரு மயிலைப் பார்த்தேன்!..... என்ன அழகான தோகை?.....

அதன் அழகுக்கு முன் நாம் எம்மாத்திரம்?...'' என்று தன் கவலையை அவைகளுடன் பகிர்ந்து கொண்டது.

காகம், கொக்கு, கிளி மூன்றும் மயிலைச் சந்தித்தன. அதன் அழகைப் பார்த்து வியந்து பாராட்டின. 

""இந்த அழகான தோகையால்தான் என் உயிருக்கே ஆபத்து!...... சிலர் இந்தத் தோகைக்காக என்னைக் கொல்லவும் தயங்குவதில்லை.... என் அழகுதான் எனக்கு ஆபத்தாக உள்ளது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களுக்கு உங்கள் இறகுகளால் ஆபத்து ஏதும் இல்லை. '' என்றது மயில்.

காகம் கொக்கு, கிளி மூன்றும், ""இனி நாம் நம் நிறம் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. நம் நிறம் இயற்கை கொடுத்த வரம்! அதில் நாம் திருப்தி அடைவோம். இல்லாததை நினைத்து ஏன் ஏக்கப்பட வேண்டும்?....'' என்று மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியாக வாழத்தொடங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.