கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கவிஞர் சொ. அருணன்

வள்ளல் என்ற பெருமை 
    வருவ தில்லை எல்லோர்க்கும்
அள்ளிக் கொடுத்த அழகர்
    அவர்போல ஒருவ ரில்லை
 
 செல்வம் தேடிக் குவித்தார்  - அதை
    எல்லோருக்கும் கொடுத்தார்
கல்வி என்னும் கண் திறக்கக்
    கோயில் ஒன்று  எடுத்தார்         (வள்ளல்)
 
சாதி பேதம்  ஒழித்தார் -  மதச்
    சண்டைகளை மறுத்தார்
நீதியொன்றே எவர்க்கும் என்ற
    நிலையை அவரும் வகுத்தார்     (வள்ளல்)
 சங்க மன்னர் போல - தனி
    அரசு ஒன்றை அமைத்தார்
எங்கும் வறுமை தீர்க்கச்
    சமத்துவத்தைச் சமைத்தார்         (வள்ளல்)
 
பெண்கள் கல்வி பெறவே - அவர்
    பெரிய கனவு கண்டார்
கண்கள் போல அவரைக்
    காக்க வேண்டும் என்றார்            (வள்ளல்)
 
கடவுள் என்று சொல்வார் - கண்ணில்
    கண்டதில்லை நாமும்
கடவுள் வடிவில் வள்ளல்
    போற்றித் தொழுவோம் நாளும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.