கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நினைவுச் சுடர்! எப்படி சாப்பிட்டால் சுவை...?

News image
Updated On :23 ஏப்ரல் 2022, 12:05 pm

தினமணி

"ரொட்டியை எப்படி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?'' என்று குரு, தன் சீடர்களிடம் கேட்டார்.

"வெண்ணெய் தடவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு சீடன்.

"ஜாம் தடவி சாப்பிட்டால் நன்றாக இருக்கும்...'' என்றான் இன்னொருவன்.

"பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்'' என்றான் மற்றொருவன்.  "தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்'' என்றான் வேறொருவன். இப்படிப் பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

இறுதியாக மாணவன் ஒருவன் எழுந்து, "ரொட்டியை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் குருவே'' என்று கூறினான். இதைக் கேட்ட குரு மிகவும் மகிழ்ந்து அந்த மாணவனைப் பாராட்டினார். அவ்வாறு பாராட்டு பெற்ற மாணவர் "நரேந்திரன்' என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் "வீரத்துறவி' எனப் போற்றப்பட்ட சுவாமி விவேகானந்தர்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.