பறவைகளின் விசித்திரத் தூக்கம்

கிவிப்பறவை (நியூஸிலாந்து) பூமிக்கடியில் காணப்படும் வளைகளில் நுழைந்துகொண்டு தூங்கும்.
பறவைகளின் விசித்திரத் தூக்கம்
Updated on
1 min read

கிவிப்பறவை (நியூஸிலாந்து) பூமிக்கடியில் காணப்படும் வளைகளில் நுழைந்துகொண்டு தூங்கும்.

"கிரீப்பர்' என்ற பறவை  மரப்பொந்துகளில் மல்லாந்து படுத்து தூங்கும்.

 "ஸ்வாட்' என்ற பறவை பெரிய பந்துபோல் ஒன்றையொன்று கட்டிக் கொண்டு கூட்டமாகச் சேர்ந்தே தூங்கும்.

வாத்துகளும் அன்னங்களும் தண்ணீரில் மிதந்தபடியே தூங்கும். குளிர்நாடுகளில் இரவில் திடீரென நீர் உறைந்துவிடுவதால், அவை பனிக்கட்டிகளில் சிக்குவதும் உண்டு.

அமெரிக்காவில் உள்ள கறுப்பு வாத்துகள் நீரில் மிதந்தவாறு  தூங்கும். அப்போது, காற்றடித்தால் தூக்கத்திலேயே ஒரு காலை ஆட்டித் துடுப்புப் போட்டு காற்றானது தன்னுடைய இருப்பிடத்தைத் தள்ளிவிடாமல் பார்த்துகொள்ளும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com