பாரதி பாட்டில் பண்பு...

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாட்டைப் படிக்கும் மாணவன்
பாரதி பாட்டில் பண்பு...
Updated on
1 min read

பாட்டுக்கொரு புலவன் பாரதி

பாட்டைப் படிக்கும் மாணவன்

நாட்டுக்கு உழைக்கும் நற்பண்பை

நாளும் பெற்று உயர்வான்

வீட்டை மறக்கும் விளையாட்டில்

வீண்பொழுது போக்க மாட்டான்

நாட்டைக் காக்கும் விளையாட்டில்

நாட்டம் கொள்வான் வீரனா வான்

ஏட்டு படிப்போடு நில்லாது

ஏற்றமான செயலைச் செய்வான்

கேட்டும் பெறுவான் அறிவை

கேடின்றி வாழ்வான் உலகில்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com