1.நெருப்பில் வெந்தாலும் நீண்டு கொண்டே போவான். அவன் யார்?
2. பாடத் தெரிந்தவனுக்கு பாம்பே எதிரி. அவன் யார்?
3. பின்தொடர்ந்தே வருவான். ஆனால், பிடிக்க முடியாது. அது என்ன?
4. எதிரியைக் கண்டால் முடியெல்லாம் முள்ளாகும். அது என்ன?
5. பார்த்தால் பச்சை, புசித்தால் கசப்பு. அது என்ன?
6. கண்ணுக்குத் தெரியாது. பசியில் பிடிக்க முடியாது. உயிர்கள் வாழ நானும் ஒரு காரணம். நான் யார்?
7. வெளிச்சத்தில் தெரியும் நான், இருள் வந்தால், மறைந்துவிடுவேன். என்னைப் பார்க்கலாம். ஆனால், பிடிக்க முடியாது. நான் யார்?
விடைகள்:
1.இரும்பு, 2. தவளை, 3.நிழல், 4.முள்ளம்பன்றி, 5.பாகற்காய், 6.ஆக்சிஜன், 7. நிழல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







