முள்கிரீட நட்சத்திர மீன்

வனப்பகுதியில் புலிகள் அதிகம் வாழும் நாடு இந்தியாதான். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் சமீ
முள்கிரீட நட்சத்திர மீன்
Updated on
1 min read

வனப்பகுதியில் புலிகள் அதிகம் வாழும் நாடு இந்தியாதான். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்படி 1706 புலிகளே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். 2007ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1411 புலிகள் மட்டுமே இருந்தன. எல்லா மாநிலங்களிலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்திருந்த போதும் தமிழகத்தில் மட்டுமே சற்று அதிகரித்திருந்தது. அதன் விலைவாகத்தான் முதுமலை, ஆனைமலை போன்ற புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன.

புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க "பிராஜக்ட் டைகர்' திட்டத்தை அரசு துவங்கி, நாட்டின் பல பகுதிகளிலுள்ள காடுகளைப் "புலிகள் சரணாலயமாக' அறிவித்தது. புலிகளின்  எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடு 1973-ஆம் ஆண்டு முதல் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளான சிறுமுகை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நாட்டின் தேசிய விலங்கான புலியின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com