நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஒட்டக்கூத்தர் காலத்தில் மணமகன் தேடல்...

சங்க காலத்தில் மணமகனைத் தேடியதாகப் பதிவுகள் ஏதுமில்லை. பெரும்பாலும் அவை காதல் மணமே. அங்கு வசதியுள்ளவனா, ஏழையா என்பதெல்லாம் ஏதும் பதிவாகவில்லை.

News image
Updated On :31 ஜனவரி 2024, 4:02 pm IST

சங்க காலத்தில் மணமகனைத் தேடியதாகப் பதிவுகள் ஏதுமில்லை. பெரும்பாலும் அவை காதல் மணமே. அங்கு வசதியுள்ளவனா, ஏழையா என்பதெல்லாம் ஏதும் பதிவாகவில்லை. தலைவியைக் கண்டு காதலுறும் தலைவனை மனம் ஒத்து மணந்ததாகத்தான் பதிவுகள் உண்டு.

11-ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்டப் பதிவு (ராமாயணம்) சற்று முரண்படுகிறது. பெண்ணைப் பெற்ற தந்தை, தாயாரின் எதிர்பார்ப்பு வேறு; பெண்ணின் எதிர்பார்ப்பு வேறாய் உள்ளது எனப் பாடல் (243) தெரிவிக்கின்றது. (இராவணன் பிறப்புப் படலம்). 

 "குலம் வேண்டும் என்றிருப்பர் குளத்துள்ளார்
    கல்வியினால் குறையா ஞானப்
பலம் வேண்டும் என்றிருப்பர் தந்தைமார்
    பரந்த பெருஞ்செல்வம் உள்ள
தலம் வேண்டும் என்றிருப்பர் தாய்மார்கள்
    யௌவனமும் அழகுஞ் சார்ந்த
நலம் வேண்டும் என்றிருப்பர் நாறுகுழல்
    கன்னிமார் நலத்தின் மிக்கார்'

ஒரே ஒரு வேறுபாடுதான். மணமகளை அழைத்து வந்து மணமகனைப் பார்க்கும் நிலை. பாராட்ட வேண்டிய ஒன்று. மணமகனைப் பிடித்ததும் கேட்கும் கேள்வி,

"பின்னும் மயன் கூறுவன் நின்பே ரெழிலும்
யௌவனமும் பேச வேண்டா
உன்வழியும் உன்பதியும் உன்பெயரும்
உன் நலமும் உரைத்தி' 


என்ற மணமகள் வீட்டாருக்கு, "ஆயிரம் வேதம் கற்றவன்' எனத் தன்னை இராவணன் அறிமுகம் செய்து கொள்கிறான்.

        "... .... அயன்மைந்தன் மகன் மைந்தன்
        அணி இலங்கா புரியை யாளும்
        மன்னவன் பேர் தசக் கிரீவன் மறைகள்
        ஓராயிரம் யான் வல்லேன்' என்றனன்!' 
        (உ.கா.245)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.