புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திரிவேணியும் காப்பியும்!

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒன்றுசேரும் இடம்தான் "திரிவேணி சங்கமம்' என்று போற்றப்படுகிறது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:27 am

DIN

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒன்றுசேரும் இடம்தான் "திரிவேணி சங்கமம்' என்று போற்றப்படுகிறது. புகழ்பெற்ற அந்த முக்கூடலில் மூழ்கிக் குளிப்பதும், புனிதமான அந்நீரைப் பருகுவதும் சிறப்பான ஒன்றாக நம்மவரால் கருதப்படுகிறது.
 "திராவிடக் கவிமணி முத்துஸ்வாமி' என்கிற தமிழ் விற்பனர் "காப்பி' பருகுவதில் மிகவும் விருப்பமுடையவர். அவரைப் பொருத்தவரை காப்பி புனிதமான திரிவேணி சங்கம தீர்த்தம். எப்படி என்கிறீர்களா? வெண்பா ஒன்றில் அப்புலவர் அதை அற்புதமாக விளக்குகின்றார்.
 பால், டிக்காஷன், சர்க்கரையின் "முக்கூடல்'தானே காப்பி. வெண்மையான பால் கங்கை, கருமையான டிக்காஷன் யமுனை, கரைந்து போயிருக்கும் சர்க்கரை அந்தர்வாகினியாகக் கலக்கும் சரஸ்வதி.
 பாலங்கு கங்கையா பண்பார் கஷாயமே
 ஏறும் கரிய யமுனையா - சாலக்
 கரைந்துறையும் சீனி சரஸ்வதியாம் காப்பி
 தரந்தெரி முக்கூடல் தலம்!
-திருப்புகழ் மதிவண்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.