"நற்றிணை' வெறும் துறையும் திணையும் சார்ந்ததன்று. அது திருவள்ளுவர் கூறும் "ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை' எனும் பண்பினைப் பறை சாற்றுவது.
செல்வச் செழிப்பும் வீரமும் காதலும் கொண்ட தலைவன் ஒருவன்
பெண்ணொருத்தியைக் கண்டு காதலுற்று, அப்பெண்ணின் தோழியைக் கண்டு
அப்பெண்ணை அடைய முயற்சி செய்கின்றான்.
தலைவனின் செல்வம், வீரம், வலிமை உணர்ந்து, தன் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கின்றாள் அப்பெண். சின்னக் குடிசையில் வாழ்பவள் அவள். கடலுள் துணிந்து சென்று மீன் பிடித்து மீள்பவள். நிணத்துடை சுராவை அரிந்து தசைகளை காய வைத்துப் பிழைப்பவள். எனவே, "செல்வச் செழிப்புமிக்க குறுநில மன்னன் மகனான அவனை, அருகே வரவேண்டாம் எனக் கூறி, ஒப்பில்லா இப்பெண்ணைவிட்டு ஒதுங்கிச் செல்' என அவன் ஏற்கும் வண்ணம் நயமாகப் பண்போடு எடுத்துரைத்து, அன்போடு மறுத்துரைக்கின்றாள் தோழி.
இவளே, கானல் நண்ணிய காமர்சிறுகுடி
நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீள் எறி பரதவர் மகளே; நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே;
புலவு நாறுதும் செலகின்றீமோ? என்றும் கேட்டு,
பெருநீர் விளையுள் எம்சிறுநல்வாழ்க்கை
நும்மொடு, புரைவதோ அன்றே;
எம்மனோரில் செம்மலும் உடைத்தே! (நற்.45)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


