காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

அற்புதச் சித்திரக் கவியில் அழகுச் சுழிகுளம்!

"ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரகவி' என கவிகளை வகைப்படுத்துவர். சித்திரத்தின் மூலம் (ஓவியத்தின்) வரைந்து பாடப்படுவது சித்திரக்கவி.

News image
Updated On :10 மே 2020, 4:30 pm IST

"ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரகவி' என கவிகளை வகைப்படுத்துவர். சித்திரத்தின் மூலம் (ஓவியத்தின்) வரைந்து பாடப்படுவது சித்திரக்கவி.

வ்வகை சித்திரக் கவிகளுள் ஒன்றாகத் திகழ்வது "சுழிகுளம்' என்கிற பிரிவாகும். இத்தகு சுழிகுளம் என்ற சித்திரக்கவி செய்யுளின் எழுத்து எண்ணிச் செய்யப்படுவது.

இதில் இடம்பெறும் செய்யுள் நான்கு அடிகளைக் கொண்டிருத்தல் வேண்டும். ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துகளை மட்டும் பெற்றிருத்தல் அவசியம். இவ்வெட்டு எழுத்துகளும் மேலும், கீழும், உள்ளும், புறமுமாக ஒத்தமைய வேண்டும்.

சித்திரக் கவிகளை அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருமங்கை ஆழ்வார், நாற்கவிராச நம்பி போன்றோர் யாத்துள்ளனர். சித்திரக் கவியுள் பலவகைச் செய்யுள்கள் அமைந்துள்ளன. அவற்றுள் "சுழிகுளம்' என்ற செய்யுளின் அழகைப் படித்து இன்புறுவோம்.

"சுழிகுளம்' என்ற சித்திரக் கவிக்குப் பரிதிமாற் கலைஞர் தரும் எடுத்துக் காட்டுச் செய்யுள் இது:

"கவிமுதி யார் பா வே
விலையரு மா நற்பா
முயல் வ துறுநர்
திருவழிந்து மாயா'
இச்செய்யுளின் பொருள் வருமாறு:

கவிமுதியார் பாவே - செய்யுள் இயற்றுவதில் முதிர்ச்சி பெற்றவர் பாடல்களே!; விலை அருமை மா நன்மை பா - விலை மதித்தற்கு அரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாகும்; முயல்வது உறுநர் - முயற்சி செய்வதில் நன்கு பொருந்தினவர் தம் ; திரு அழிந்து மாயா - செல்வம் சிதைந்து தொலையா.

"சுழிகுளம்' என்ற சித்திரக் கவிக்கு மாறனலங்காரம் தரும் இலக்கணம் வருமாறு:

"தெழித்தெழு நீர்குளத்
தினுட்செறிந்ததைக் கொடு
சுழிந்தடங் குவபோன்
றடங்குதல் சுழிகுளம்'


"ஆரவாரித்து எழும் புனல் குளத்தினுள் தன் இடத்தை அடைந்தது யாதொன்று, அதனைக் கைக்கொண்டு சுற்றி உள்ளே அடங்குவது போல, சுற்றிப் பாவினகத்துப் பொருளைக் கொண்டு அடங்குதல் சுழிகுளமாகும்' என்பது இந்நூற்பாவின் பொருள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.