பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

மாயோன் கொப்பூழில் மலர்ந்த தாமரை

எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடல் ஒன்றே இசைநூலாகும். இதன் செய்யுட்கள் 70 எனத் தெரிகிறது. அவற்றுள் இப்போது கிடைத்திருப்பவை 24 மட்டுமே.

Updated On :6 அக்டோபர் 2024, 7:44 pm IST

எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடல் ஒன்றே இசைநூலாகும். இதன் செய்யுட்கள் 70 எனத் தெரிகிறது. அவற்றுள் இப்போது கிடைத்திருப்பவை 24 மட்டுமே. பல வகைப் பாக்களும் பலவாய் அடிகளும் பரிந்து (ஏற்று) வரும் பாட்டாகும். காமமே கருத்தாகக் கொண்டுள்ளதால் இலக்கண முறைமையில் அகவிலக்கியமே.

ஆனால் இதுபோதுள்ள பரிபாடல் நூலில் வையை முருகன் பற்றிய பாடல்களே அகப்பொருள். பக்தி நெறியும் பாண்டியர் வழியும் பெரிதும் பேசப்படுகின்றன. எனவே புறப்பொருள் போக்கும் பெற்றிருக்கிறது. தொடக்கத்தில் 70 பாடல்களின் தொகுப்பாக விளங்கிய இந்நூலில் இப்பொழுது 22 பாக்களே உள்ளன. அவையும் திருமால், முருகன், வையை ஆகியன பற்றி அமைந்துள்ளன. பரிமேலழகரின் சீரிய உரையும் இந்நூலுக்கு அமைந்துள்ளது பெரும் சிறப்பாகும்.

மதுரை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை, வையை இவற்றின் சிறப்பும் அக்கால உணவு, ஆடை, அணிகள், கடவுள்கள், வழிபாடுகள், விழாக்கள் விவரிக்கப்பட்டுள்ளன. புதுப்புனல் விழாவும் மார்கழி நீராட்டு விழாவும் இனிது விளக்கப்பட்டுள்ளன.

இதில் வரும் ஒரு பாடல்-

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

பூவொடு புரையும் சீரூர் பூவின்

இதழகத் தனைய தெருவம் இதழகத்து ற்

அரும் பொகுட்டனைத்தே

அண்ணல் கோயில்

தாதின் அனையர் தண்டமிழ்க்குடிகள்

தாதுண் பறவை யனையர்

பரிசில் வாழ்நர்

பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த

நான்மறைக் கேள்வி நவில்

குரல் எடுப்ப

ஏமவின் றுயில் எழுதல் அல்லதை

வாழிய வஞ்சியும் கோழியும் போலக்

கோழியின் எழாதெம் பேரூர் துயிலே

(பரிபாடல் -7)

மதுரையின் அமைப்பு தாமரை மலருக்கு ஒப்பிடப்பட்டுள்ள அழகே அழகு. மதுரை நகரம் திருமாலின் உந்தியில் மலர்ந்துள்ள தாமரை மலரை ஒக்கும். அந் நகரத்துள்ள தெருக்கள் அம்மலரின் இதழ்களை ஒக்கும். பாண்டியன் அரண்மனை அம்மலரகத்துள்ள பொகுட்டை ஒக்கும். அந்நகரில் வாழும் தமிழராகிய குடிமக்கள் அம்மலரின் தாதுக்களை ஒப்பர். அந் நகருக்கு வரும் இரவலர் தாதுண்ண வரும் வண்டுகளை ஒப்பர்.

மதுரையிலுள்ள மாந்தர் வேத முழக்கத்தாலே நாள்தோறும் துயிலெழுவரேயன்றி வஞ்சி நகரத்தாரும் உறையூராரும் போல கோழி கூவுவதாலே துயிலெழுதலில்லை என்றுரைப்பார்.

இச்செய்யுளில் வரும் மாலையணி என்னும் உவமை சிறப்பானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.