
துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டும்
பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க
அகடுஉற யார்மட்டும் நில்லாது, செல்வம்
சகடக்கால் போல வரும்.
(பாடல் 2, அதிகாரம்: செல்வம் நிலையாமை)
செல்வம் எவரிடத்தும் நிலையாக நிற்பதில்லை. வண்டிச் சக்கரத்தின் ஆர்க்கால்கள் போல மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி இடம் மாறிக் கொண்டே போகின்ற இயல்பினை உடையது செல்வம். அதனால் நெல்விளைவாகிய குற்றமற்ற பெருஞ்செல்வமானது விளைந்து தோன்றிய காலத்திலே அதனைச் சேமித்து வைக்காமல் அனைவரும் பசியின்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் பலருடன் கூடி பகிர்ந்து உண்பீர்களாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.