தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மெக்ஸிகோ மதுபான விடுதியில் பெரும் தீ விபத்து: 23 பேர் பலி 

மெக்ஸிகோவில் மதுபான விடுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 23 பேர் பலியானார்கள். 

News image
Updated On :28 ஆகஸ்ட் 2019, 9:54 pm IST

கோட்ஸாகோல்கோஸ் (மெக்ஸிகோ):  மெக்ஸிகோவில் மதுபான விடுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 23 பேர் பலியானார்கள். 

மெக்ஸிகோவின் வெராக்ரூஸ் மாநிலத்தில் உள்ள வளைகுடா நகரம் கோட்ஸாகோல்கோஸ். இங்குள்ள எல் கபாலோ பிலாங்கோ என்னும் மதுபான விடுதியில் நடந்த தீவிபத்தில் 23 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.

அங்கு நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போதைமருந்து  கடத்தலில் ஈடுபட்டிருக்கும் இரு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்த மாநில ஆளுநர் கார்சியா உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.