சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

சந்தா முறையை அறிமுகப்படுத்த டிவிட்டர் நிறுவனம் ஆலோசனை

சமூக வலைத்தள நிறுவனமான டிவிட்டர் பயனாளர்களுக்கு சிறப்பு வசதிகளை பயன்படுத்த சந்தா முறையை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.

News image
சந்தா முறையை அறிமுகப்படுத்தும் டிவிட்டர்
Updated On :27 ஜனவரி 2024, 5:02 pm

DIN

சமூக வலைத்தள நிறுவனமான டிவிட்டர் பயனாளர்களுக்கு சிறப்பு வசதிகளை பயன்படுத்த சந்தா முறையை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.

உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் டிவிட்டர் செயலி பயன்பாட்டில் உள்ளது. சாதாரண மக்கள் தொடங்கி பிரபலமான நட்சத்திரங்கள் வரை டிவிட்டரில் பயனாளர்களாக உள்ளனர்.இந்நிலையில் டிவிட்டரில் கூடுதல் வசதிகளை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

அனுப்பிய செய்தியை திரும்பப்பெறுதல், வண்ணங்களை மாற்றிக் கொள்தல், அதிக அளவு கொண்ட வீடியோ கோப்புகளை பதிவிடுவது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தக் கூடுதல் வசதிகளை சந்தா செலுத்தும் பயனர்களுக்கு மட்டும் வழங்கும் திட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஜூலை 23 அன்று, தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி முதலீட்டாளர்களிடம், விளம்பர வருவாய் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ட்விட்டர் சந்தா விருப்பங்களைக் குறித்து ஆராய்வதாக தெரிவித்திருந்தது குரிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.