இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சீனாவிலிருந்து வரும் அதிர்ச்சியூட்டும் கரோனா நிலவரம் 

சீனாவில் நாள் ஒன்றுக்கு கரோனா பாதித்து மரணமடைவோர் எண்ணிக்கை 9 ஆயிரமாக அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
சீனாவிலிருந்து வரும் அதிர்ச்சியூட்டும் கரோனா நிலவரம் 
Updated On :31 டிசம்பர் 2022, 12:29 pm

DIN

சீனாவில் நாள் ஒன்றுக்கு கரோனா பாதித்து மரணமடைவோர் எண்ணிக்கை 9 ஆயிரமாக அதிகரித்திருப்பதாக ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் ஊடகச் செய்தி ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஊடகச் செய்தியில், பிரிட்டிஷிலிருந்து இயங்கும் ஆய்வு நிறுவனம் ஏர்ஃபினிடி சீனாவில், கரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பாதிப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை சீனா கடந்த நவம்பர் மாதத்தில் தளர்த்திய நிலையில் அங்கு கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது.

சீனாவில் டிசம்பர் மாதத்தில் மட்டும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தொட்டிருப்பதாகவும், கிட்டத்தட்ட 1.8 கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மத்தியில் நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்போர் விகிதம் 30 லட்சமாக இருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில், ஜனவரி மாதம் மட்டும் கரோனாவுக்கு 5,84,000 பேர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பெய்ஜிங், கரோனா பாதிப்பு மற்றும் மரண விகிதங்களை மறைப்பதை தீவிரப்படுத்தியிருப்பதாகவும், இதுவரை உலகம் காணாத வகையில், சீனாவில் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும், இதனை கையாள முடியாமல் ஒட்டுமொத்த நாடும் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.