கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இலங்கையில் இன்றிரவு முதல் மீண்டும் ஊரடங்கு

இலங்கையில் இன்றிரவு 8 மணிமுதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக அதிபர் அலுவலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 மே 2022, 8:51 am

DIN

இலங்கையில் இன்றிரவு 8 மணிமுதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக அதிபர் அலுவலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து மே 9ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. தொடர்ந்து, கடந்த வாரம் அதிபா் கோத்தபய ராஜபட்சவால் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். புதிதாக 4 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்நிலையில், இலங்கையின் முக்கிய பண்டிகையான புத்த பூர்ணிமா விழாவிற்காக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இருப்பினும், அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால், இன்றிரவு 8 மணிமுதல் நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.