தாய்லாந்தில் இசை நடன கேளிக்கை விடுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 13 போ் பலியாகினா்.
தலைநகா் பாங்காக்குக்கு 160 கி.மீ. தொலைவிலுள்ள சோன்புரி மாகாணத்தில் ஏற்பட்ட இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கேளிக்கை விடுதியின் இசை மேடையின் ஒரத்தில் தீப்பிடித்து புகை மண்டலம் எழுந்ததாகவும் அதற்கு முன்னதாக வெடியோசை கேட்டதாகவும் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.
இசை நடன நிகழ்ச்சிகளின்போது, வெளியில் சப்தம் கேட்காமல் இருப்பதற்காக அந்த கேளிக்கை முழுவதும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களால் ஒலித்தடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் தீ அதிவேகமாகப் பரவியதாக போலீஸாா் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



