முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஏவுகணை சோதனை: மகளுடன் பங்கேற்ற வடகொரிய அதிபர் 

ஏவுகணை சோதனையின் போது தனது மகளுடன் பங்கேற்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் படம் வெளியாகியுள்ளது

News image
Updated On :19 நவம்பர் 2022, 1:08 pm

DIN

ஏவுகணை சோதனையின் போது தனது மகளுடன் பங்கேற்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் படம் வெளியாகியுள்ளது.

தென்கொரியா அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. 

கடந்த அக்டோபர் மாத இறுதியிலும், நவம்பர் மாத தொடக்கத்திலும் 23 ஏவுகணை சோதனையை அந்நாடு மேற்கொண்டது. வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஐசிபிஎம் வகை ஏவுகணையை வடகொரியா வெள்ளிக்கிழமை சோதனை செய்தது. இந்த சோதனையின் போது வடகொரிய அதிபர் தனது மகளுடன் பங்கேற்றார். 

ஏவுகணை அருகே தனது மகளுடன் வடகொரிய அதிபர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஏவுகணை சோதனையின் போது தனது மகளுடன் வடகொரிய அதிபர் கலந்து கொண்டது இதுவே முதல் முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.