பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஜோ பைடன் சந்திப்பு: காஸாவில் தொடரும் தாக்குதல்!

ஜோ பைடன் -நெதன்யாகு சந்திப்பு நிகழ்ந்துக் கொண்டிருக்கிற அதே வேளையில் காஸாவின் மீதான குண்டுவீச்சும் தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேல்

Published On :

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிற அதே வேளையில் காஸாவின் மீதான குண்டுவீச்சும் தொடர்ந்து வருகிறது. கான் யூனிஸ் பகுதியில் தாக்குதல் நடந்திருக்கிறது. 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். 40 பேர் காயமுற்றுள்ளனர்.

நெதன்யாகு மற்றும்  ஜோ பைடன்

நெதன்யாகு மற்றும்  ஜோ பைடன்

ஜோர்தான் சந்திப்பு ரத்து

காஸாவிலுள்ள மருத்துவமனை மீதான தாக்குதலின் விளைவாக விளைவாக ஜோர்தானில் அரபு தலைவர்களுடன் ஜோ பைடன் கலந்து கொள்ளவிருந்த மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு

ஜோ பைடன், இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய உதவிகளை அமெரிக்கா அளிக்கும் என்பதை உறுதி செய்திருக்கிறார். 

இந்த நிலைப்பாடு தெரிந்தது தான் எனினும் மருத்துவமனை தகர்ப்புக்குப் பிறகு மேற்கு கரை(வெஸ்ட் பேங்க்) பகுதிகள் அமெரிக்கா மீது கடும் அதிருப்தியில் உள்ளன. அங்கு அன்றாட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

சீனா கண்டனம்

மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. அந்த வரிசையில் சீனாவும் இணைகிறது.

“சீனா மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. கடும் உயிர்ப்பலியை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறது. உடனடியான போர் நிறுத்தத்தை சீனா வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் பலியான குழந்தையின் உடலை மீட்கும் பணி

தாக்குதலில் பலியான குழந்தையின் உடலை மீட்கும் பணி

காஸாவின் நிலை

காஸாவில் ஒரு லிட்டர் எரிபொருள் இருந்தாலும் சில உயிர்களைக் காக்க இயலும் என்கிற நிலை தான் உள்ளது. வடக்குப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மூடப்படுள்ள நிலையில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவமனைகளிலும் பல பகுதிகள் மின்சாரப் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளன.

ஒரு லிட்டர் எரிபொருள் இருந்தால் கூட எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் எனப் பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது காஸா சுகாதார அமைச்சகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.