திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

காங்கோவில் 500க்கும் மேற்பட்டோர் பலி! மர்ம நோயல்ல; மலேரியா நோய்தான்!

காங்கோவில் பரவிவரும் மர்மநோயை மலேரியாதான் என்று உலக சுகாதார அமைப்புa தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 9:16 pm IST

காங்கோவில் பரவிவரும் மர்மநோயை மலேரியாதான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

காங்கோவில் ஒருமாத காலமாக மர்ம நோயால் பலரும் பலியாகி வந்த நிலையில், நோய்க்கான காரணத்தை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்தது. அக்டோபர் மாதத்தில் இருந்து காங்கோவில் சுமார் 600 பேர் வரையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு பலியாகினர். மேலும், இந்த நோயால் 200-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், கடும் தலைவலி, சளி, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக காங்கோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, 6.2 சதவிகிதம் இறப்பு விகிதம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியது.

இந்த நிலையில், காங்கோவில் அதிகளவில் பரவிவரும் இந்த மர்ம நோய்க்கான விளக்கத்தை உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது. காங்கோவில் பரவி வருவது மர்ம நோயல்ல; மலேரியா நோய்தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட பலரைத்தான் இந்த நோய் தாக்கியுள்ளது. மலேரியாவும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடும்தான் நோயின் தாக்கத்தை வீரியமடையச் செய்துள்ளது.

இந்த நோயால் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் பாதிக்கும் அதிகமானோர் 5 வயதுக்குள்பட்டவர்களே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.