உலகின் மிக மோசமான குற்றவாளியைக் கட்டிப்பிடித்த மோடி: உக்ரைன் அதிபர் கருத்து!

உலகின் மிக மோசமான குற்றவாளியை மோடி கட்டிப்பிடித்ததாக உக்ரைன் அதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.
வொலோதிமீா் ஸெலென்ஸ்கி / மோடியுடன் புதின்
வொலோதிமீா் ஸெலென்ஸ்கி / மோடியுடன் புதின்
Published on
Updated on
1 min read

உலகின் மிக மோசமான குற்றவாளியை மோடி கட்டிப்பிடித்தது ஏமாற்றமளிப்பதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்தியா - ரஷியா இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார். ரஷிய அதிபர் புதினுடன் மோடி இன்று (ஜூலை 9) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்குப் பின் இதுகுறித்த முழு விவரம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த நிகழ்வு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, “உக்ரைனில் இன்று ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக 13 குழந்தைகள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இளவயது புற்றுநோயாளிகள் இருக்கும் குழந்தைகளுக்கான மருத்துவமனையை குறிவைத்து ரஷிய ஏவுகணைத் தாக்கியுள்ளது. பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

வொலோதிமீா் ஸெலென்ஸ்கி / மோடியுடன் புதின்
உக்ரைன்: குழந்தைகள் மருத்துவமனையில் ரஷியா ஏவுகணை தாக்குதல் -31 போ் உயிரிழப்பு

இந்த நேரத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒருவர் மாஸ்கோவில் உலகின் மிக மோசமான குற்றவாளியைக் கட்டிபிடித்தது மிகவும் ஏமாற்றமாகவும், அமைதியின் மீது விழுந்த அடியைப் போலவும் இருக்கின்றது” என்று புதினுடனான மோடியின் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 14 அன்று இத்தாலியில் ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com