உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் எல்லையில், இருநாட்டு படைகளும் இடையிலா துப்பாக்கிச் சூடு மோதலில், சுமார் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு சூடானின் ராணுவப் படைகள், கடந்த ஜூலை 28 ஆம் தேதியன்று உகாண்டா ராணுவத்தினர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், உகாண்டா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு, பதிலடியாக உகாண்டா ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில், 3 தெற்கு சூடான் வீரர்கள் கொல்லப்பட்டதாக, உகாண்டா ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தெற்கு சூடானின் அதிகாரிகள் தாக்குதலில் பலியான 5 வீரர்களின் உடல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
முன்னதாக, வடமேற்கு உகாண்டாவின் வெஸ்ட் நைல் பகுதியில், எல்லையைக் கடந்து வந்து தெற்கு சூடான் படையினர் முகாமிட்டு அங்கிருந்து வெளியேற மறுத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால், அவர்களின் மீது உகாண்டா ராணுவம் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒப்புக்கொண்டதன் மூலம் சண்டை நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தெற்கு சூடானின் அதிபர் சால்வா கீர் தலைமையிலான அரசு படைகளுக்கும், அந்நாட்டின் துணை அதிபர் ரெயிக் மச்சாரின் ஆதரவுப் படைகளுக்கும் இடையில் மோதல் நிலவி வருகின்றது.
இதில், அதிபர் சால்வா கீர்-க்கு ஆதரவாக உகாண்டா அரசு தனது படைகளை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
At least four people have been killed in a gunfight between Ugandan and South Sudanese forces on the border.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எபோலா தொற்றிலிருந்து மீண்ட உகாண்டா!

ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்!
செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!

லெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



