மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கிரீன்லாந்து ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடுகள் மீது 10% வரி: டிரம்ப் அட்டூழியம்?

கிரீன்லாந்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகள் மீது பிப். 1 முதல் 10% வரி: டிரம்ப் அறிவிப்பு

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :18 ஜனவரி 2026, 9:10 am IST

கிரீன்லாந்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது 10 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார்.

கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பிரிட்டன், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் மீது 10 சதவிகித வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் மீதான இந்த 10 சதவிகித வரி விதிப்பு பிப்ரவரியின் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருவது மட்டுமின்றி, ஜூன் முதல் தேதியில் 25 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்புக்கு கிரீன்லாந்து முக்கியமானது என்று டிரம்ப் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இருப்பினும், கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தொடர்ந்து எதிர்ப்புதான் தெரிவித்து வருகிறது.

Summary

US President Trump Imposes 10% Tariff On Denmark, UK, France For Opposing Greenland Plan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.