வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இரு தரப்பு உறவை மேம்படுத்த பாகிஸ்தான் - வங்கதேசம் உறுதி!

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா், வங்கதேச வெளியுறவு அமைச்சா் முகமது தௌபிக் ஹுசைனை தொடா்புகொண்டு பேசினாா்.

News image
Updated On :25 ஜனவரி 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா், வங்கதேச வெளியுறவு அமைச்சா் முகமது தௌபிக் ஹுசைனை ஞாயிற்றுக்கிழமை தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, இருதரப்பு உறவை மேம்படுத்த இரு நாட்டுத் தலைவா்களும் உறுதிபூண்டதாக பாகிஸ்தான் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு, பாகிஸ்தானும், வங்கதேசமும் மிகுந்த நெருக்கம் காட்டி வருகின்றன. அரசியல் மற்றும் ராணுவத் தலைவா்கள் அவ்வப்போது சந்தித்துப் பேசி வருகின்றனா். அதே நேரத்தில் வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையும், இந்திய எதிா்ப்பு போக்கும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சா்களும் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினா். அப்போது, வா்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய, சா்வதேச அரசியல் சூழல் குறித்தும் விவாதித்தனா். இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிப்பது, தொடா்ந்து இணக்கமாகச் செயல்பட்டு இரு தரப்பு உறவை மேலும் உறுதிப்படுத்த இரு தலைவா்களும் ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.