கீவ் : உக்ரைனில் சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) வான் வழி தாக்குதல்களை நடத்திய ரஷியா, சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஆரேஷ்நிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல்களில் இருவர் பலியானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை கீவ் நகரில் ரஷியா நடத்திய தாக்குதலில் அரசு அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்கள், பள்ளிகள் பலத்த சேதமடைந்தன. இந்தத் தாக்குதல்களில் 83 பேர் காயமடைந்தனர்.
கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் சண்டையில் இத்தகைய சக்திவாய்ந்த ஆயுதம் மூன்றாவது முறையாகப் பயன்படுத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Ukrainian President Volodymyr Zelenskyy said Sunday that Russia used the powerful hypersonic Oreshnik ballistic missile during a mass drone and missile attack on Kyiv on Sunday that killed at least two people, marking the third time the weapon has been used in the four-year war.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

உக்ரைனில் ரஷியா 3-ஆவது நாளாக தாக்குதல்

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்!

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


