தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

பெருவெள்ளத்துக்கு அமெரிக்கா, சீனா, இந்தியாவே தார்மிக பொறுப்பு! நேபாளம் திட்டவட்டம்!

பெருவெள்ளத்துக்கு அமெரிக்கா, சீனா, இந்தியாவே தார்மிக பொறுப்பு என நேபாளம் தெரிவித்திருப்பது பற்றி...

Nepal Flood

நேபாள பெருவெள்ள பாதிப்பு - ANI

Published On :2 செப்டம்பர் 2026, 4:40 pm IST

நேபாள பேரிடருக்கு முக்கிய காரணமாக விளங்கும் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் தார்மிக பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்று நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிசிர் கானல் தெரிவித்துள்ளார்.

திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

உலகையே உலுக்கிய இந்த பெருவெள்ளப் பேரிடரில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இதுவரை 1,100-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3,800 பேரைத் தேடும் பணி எட்டாவது நாளாக தொடர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், நேபாள பேரிடருக்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் விளங்குவதாகவும், இதற்காக அதிகளவில் பசுமைக்குடில் வாயு உமிழும் நாடுகளான இந்தியா, சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் பொறுப்பேற்று காலநிலை இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் காத்மாண்டு போஸ்ட் செய்திக்கு அளித்த பேட்டியில் நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவித்ததாவது:

”நேபாள பேரிடர் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது. உலக வெப்பமயமாதலுக்கு கணிசமான அளவில் பங்களிக்கும் பசுமைக்குடில் வாயு உமிழும் முதல் மூன்று நாடுகளாக அமெரிக்கா, சீனா மற்றும் இந்திய உள்ளன. இந்தியாவும் சீனாவும் நேபாளத்துக்கு அண்டை நாடுகளாகவும், பசுமைக்குடில் வாயுவை அதிகளவில் உமிழும் நாடாக அமெரிக்காவும் உள்ளன.

நாங்கள் தர்மத்தையோ, உதவியையோ கோரவில்லை. நீதி மற்றும் இழப்பீடே தேவை. சட்டரீதியாகவும் தார்மிக ரீதியாகவும் பொறுப்பேற்க வேண்டிய விஷயம் இது.

நேபாளம் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய நாடுகளுக்கு இழப்பீடு வழங்குவதில் இதுபோன்ற நாடுகள் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து சர்வதேச அமைப்புகளிடம் நேபாள அரசு உறுதியுடன் தெளிவாக குரல் எழுப்பும்” எனத் தெரிவித்துள்ளார்.

நேபாள பெருவெள்ளப் பேரிடரில் ஆயிரக்கணக்கான வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்பட நாட்டின் உள்கட்டமைப்பே சீர்குலைந்துள்ளது. புனரமைப்புப் பணிகளுக்காக மட்டும் சுமார் ரூ. 50,000 கோடி தேவைப்படும் என்று நேபாள அரசு மதிப்பிட்டுள்ளது.

இது நேபாள நாட்டின் பொருளாதாரத்தில் பத்தில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The US, China, and India bear moral responsibility for the massive floods—Nepal asserts!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.