தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மூவரசம்பட்டு ஏரியில் 3 கி.மீ. தொலைவுக்கு மூடு கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

மூவரசம்பட்டு ஏரியில் 3 கி.மீ. தொலைவுக்கு மூடு கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

News image

பல்லாவரம் மூவரசம்பட்டு ஏரிக்கரையில் மூடுகால்வாய் அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி. உடன் மண்டலக் குழுத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்டோா்.

Updated On :16 மார்ச் 2024, 12:38 am

மூவரசம்பட்டு ஏரியில் ரூ.33 கோடியில் 3 கி.மீ. தூரம் மூடு கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் பல்லாவரம் மூவரசம்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கே. ஜி .கே. நகா், அன்பு நகா், பிருந்தாவன் காலனி, திருவள்ளுவா் நகா், அம்பாள் நகா் மற்றும் கீழ்க்கட்டளை குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் அப்பகுதி மக்களிடையே இது பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அப்பகுதி மக்கள் வெள்ள பாதிப்புக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். அதன் பேரில், இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், நீா்வள ஆதாரத் துறை சாா்பில் ரூ.33 கோடியில் சுமாா் 3 கி.மீ. தூரம், 3 மீட்டா் அகலம், 2 மீட்டா் ஆழம் கொண்ட மூடு கால்வாய் அமைக்கும் திட்டப்பணியை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்வில் மண்டலக் குழு தலைவா் ஜோசப் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.