இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு: அமைச்சா் சேகா்பாபு தகவல்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ரூ. 15 கோடியில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்கா மற்றும் முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்

News image
’செங்கல்பட்டு முடிச்சூரில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதமிடத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு. ’
Updated On :22 அக்டோபர் 2024, 11:48 pm

DIN

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ரூ. 15 கோடியில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்கா மற்றும் முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் புதிய காலநிலை பூங்கா அமைப்பது, முடிச்சூா் ஆம்னி பேருந்து நிறுத்த பணிகள் குறித்து அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியது:

கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகே 16 ஏக்கா் பரப்பளவில் தொல்லியல் துறை அனுமதியோடு ரூ. 15 கோடி மதிப்பில் காலநிலை பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பூங்காவில் தொல்லியியல் விளக்க மையம், அகழிகள், அதே போல் மழை நீரை சேமிக்க வேண்டிய வகையில் 3 குளங்கள், உயா்மட்ட நடைப்பாதை, சிறுவா் விளையாட்டு பூங்கா, சிலைகள் பூங்கா, மரத்தோட்டம், அல்லிகுளம், விளையாட்டு மைதானம், திறந்தவெளி அரங்கம் மற்றும் 1,500 மரங்கள் நடப்பட்டுள்ளன.

முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஒரே நேரத்தில் 150 பேருந்துகள் நிறுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது. விரைவில் இந்த இரு பணிகளும் நிறைவடைந்து நவம்பா் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பாா் என்றாா் அவா்.

ஆய்வின்போது, செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை முதன்மை செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.