தேவாலய பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கிய இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ. உடன் செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா, எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன்.
தேவாலய பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கிய இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ. உடன் செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா, எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன்.

சிறுபான்மையினா் நல ஆய்வுக் கூட்டம்

Published on

செங்கல்பட்டு மாவட்ட சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் தமிழ்நாடு சிறுபான்மையினா் நலன்/சிறப்புக் குழுவின் ஆய்வுக் கூட்டம் திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினா் இனிகோ இருதயராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சிறுபான்மையினா் நல அமைப்புகளின் பிரதிநிதிகள் சட்டப்பேரவை உறுப்பினா் இனிகோ இருதயராஜிடம் மனுக்களை அளித்தனா். இதையடுத்து தொன்மையான புனித தோமையா் மலை தேவாலயத்தினை சீரமைக்க ரூ.31 லட்சத்துக்கான காசோலையினையும், தேவாலயங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டையினையும் இனிகோ இருதயராஜ் வழங்கினாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), எஸ்.எஸ்.பாலாஜி(திருப்போரூா்), வஃக்பு வாரிய உறுப்பினா் அ.சுபோ் கான், மாவட்டவருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சுந்தா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்)நரேந்திரன், சிறுபான்மையினா் நல அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com