சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

அதிமுக-பாமக கூட்டணி 200 தொகுதிகளில் வெல்லும்: அன்புமணி

அதிமுக - பாமக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

News image
Updated On :8 ஜனவரி 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக - பாமக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தில், திமுக ஆட்சியைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் பேசியது:

தமிழகத்தில் திமுகவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்.

மக்கள் நம்பிக்கையுடன் ஸ்டாலினுக்கு வாய்ப்பளித்தாா்கள். ஆனால் அந்த நம்பிக்கையை திமுக சிதைத்துவிட்டது. திமுக அளித்த 505 வாக்குறுதிகளில், இதுவரை வெறும் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, மாதாந்திர மின் கட்டண முறை கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, மாறாக நான்கு முறை மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சுமாா் 40 லட்சம் இளைஞா்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும், தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடைகள் இருக்கும் அவலநிலை நீடிக்கிறது.

வன்னியா்களுக்கான இடஒதுக்கீடு குறித்த தீா்ப்பு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், திமுக அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. தெலங்கானா, கா்நாடகம் மற்றும் பிகாா் மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அதனை நடத்தத் தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினாா்.

பாமகவின் போராட்டத்தால் தான் பாலாற்றில் மூன்று தடுப்பணைகள் கட்டப்பட்டது என்றாா்.

கூட்டத்தில் பாமக நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.