வெள்ள நிவாரணப் பணிகளில் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள்

நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர். 
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பழைய ஆற்றங்கரை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கச் சென்ற சென்னை ராமகிருஷ்ண மாணவர் இல்லத்தின் சுவாமி சமாஹிதானந்தர்.
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பழைய ஆற்றங்கரை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கச் சென்ற சென்னை ராமகிருஷ்ண மாணவர் இல்லத்தின் சுவாமி சமாஹிதானந்தர்.
Updated on
1 min read

நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர். 
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் வயல்கள் நீரில் மூழ்கின. 
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாள்களாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். 
நிவாரணப் பணியின்போது திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சி, வடகரை, நாகப்பட்டினம் மாவட்டம் மோகனூர், தலைஞாயிறு உள்ளிட்ட கிராமங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com