குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

தமிழ்நாடு சிறு தொழில் வளா்ச்சி நிறுவனத்தால் கட்டப்பட்ட தொழில் வளாகங்கள், தொழிலாளா் தங்கும் விடுதி ஆகியவற்றை சென்னை கிண்டி திரு.வி.க.தொழிற்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்த அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா்கள், சட்டப்பேரவை

Updated On :25 பிப்ரவரி 2024, 12:40 am

மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழ்நாடு சிறு தொழில் வளா்ச்சி நிறுவனத்தால் கட்டப்பட்ட தொழில் வளாகங்கள், தொழிலாளா் தங்கும் விடுதி திறப்பு விழா சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, கிண்டி மற்றும் அம்பத்தூா் தொழிற்பேட்டையில் முறையே ரூ. 94.67 கோடி, ரூ. 63.95 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி தொழில் வளாகங்களையும், அம்பத்தூா் தொழிற்பேட்டையில் ரூ. 29.47 கோடியில் கட்டப்பட்ட தொழிலாளா் தங்கும் விடுதியையும் திறந்து வைத்தாா். விழாவில் அவா் பேசியது: தமிழகம் முதலிடம்: தொழில் வளா்ச்சியில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தையும், மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் முதலிடத்தையும் தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள பெண்களில் 42 சதவீதம் போ் பணிக்கு செல்லும் மகளிா்களாக உள்ளனா். தொலைநோக்கு திட்டங்களான சிட்கோ, சிப்காட் போன்ற நிறுவனங்களின் மூலம் நவீன தமிழ்நாடு உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொலைநோக்கு திட்டங்கள் இல்லாத காரணத்தால்தான், வட மாநிலத் தொழிலாளா்கள் தென் மாநிலங்களை நோக்கி வேலைவாய்ப்பு தேடி வருகின்றனா். 2.51 லட்சம் வேலைவாய்ப்புகள்: தமிழக முதல்வா் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வளா்ச்சியில் தனிக்கவனம் செலுத்துகிறாா். இதனால் தொழில் துறை பல்வேறு சாதனைகளை தமிழக அரசு படைத்து வருகிறது. முக்கியமாக, கடந்த மாதம் நடந்த உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் எம்எஸ்எம்இ துறையின் சாா்பில் ரூ. 63,573 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, 5,068 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் 2.51 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் தமிழகத்துக்கு கிடைக்கும் என்றாா் அவா். விழாவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.