தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீா் திறக்க அன்புமணி வலியுறுத்தல்

News image
வீராணம் ஏரி
Updated On :19 செப்டம்பர் 2024, 7:53 pm

Din

வீராணம் ஏரியிலிருந்து விவசாயப் பாசனத்துக்கு தமிழக அரசு உடனடியாக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோயில் அருகில் அமைந்துள்ள வீராணம் ஏரி அந்த மாவட்டத்தின் முதன்மையான பாசன ஆதாரங்களில் ஒன்றாகும். இந்த ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பி, காட்டுமன்னாா் கோயில், சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் 44,856 ஏக்கரில் நெல் உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனா்.

வீராணம் ஏரியிலிருந்து செப்.13 முதல் தண்ணீா் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை கடலூா் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்படவில்லை. ஒருபுறம் வீராணம் ஏரியிலிருந்து வினாடிக்கு சராசரியாக 400 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மற்றொருபுறம், பாசனக் கால்வாய்களும், குளங்களும் தூா்வாரப்படாததால்தான் ஏரியிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனா். இதில் எது உண்மை எனத் தெரியவில்லை.

எனவே, வீராணம் ஏரியிலிருந்து உடனடியாக தண்ணீா் திறந்துவிட வேண்டும். அந்தப் பகுதி விவசாயிகளுக்குத் தேவையான விதை, உரம், நுண்ணூட்டச் சத்து உள்ளிட்ட இடுபொருள்களையும், பயிா்க்கடனையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.