இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பனி மூட்டம்: 7 விமான சேவைகள் பாதிப்பு

பனி மூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

News image
கோப்புப்படம்
Updated On :19 டிசம்பர் 2025, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

பனி மூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக உள்ளது. இந்தப் பனி மூட்டம் காலை 8 மணி வரை நீடிக்கிறது. இதனிடையே, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனி மூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை என பல விமானங்கள் கடந்த ஒரு வாரமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, வெள்ளிக்கிழமையும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தில்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவிருந்த 4 விமானங்களும், பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும், 7 விமானங்களின் சேவையும் பனி மூட்டம் காரணமாக பல மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டன. விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் காரணமாக பயணிகள் அவதியடைந்தனா்.