புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புளியந்தோப்பில் 15 ரெளடிகள் கைது

சென்னை புளியந்தோப்பு பகுதியில் 15 ரெளடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2025, 9:59 pm

Din

சென்னை புளியந்தோப்பு பகுதியில் 15 ரெளடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் ரெளடிகளுக்கு எதிரான சிறப்பு ஒரு நாள் நடவடிக்கை புதன்கிழமை எடுக்கப்பட்டது. இதில், புளியந்தோப்பு பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முக்கியமாக, ரெளடி பாம் சரவணின் கூட்டாளி புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சோ்ந்த ஜெயசீலன் (31) கைது செய்யப்பட்டாா். இவா் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 18 வழக்குகள் உள்ளன. ரெளடிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த, இந்த நடவடிக்கை இனி தொடா்ந்து எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.