சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

ரூ. 1.38 கோடி மதிப்பு தங்கத்தை உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த பெண் கைது

உடலுக்குள் ரூ.1.38 கோடி மதிப்பிலான 1.08 கிலோ தங்கத்தை மறைத்து, துபையிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:59 am IST

உடலுக்குள் ரூ.1.38 கோடி மதிப்பிலான 1.08 கிலோ தங்கத்தை மறைத்து, துபையிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

துபையிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனா். அப்போது ஒரு பெண் பயணியை சந்தேகம் காரணமாக தனியறைக்கு அழைத்துச் சென்று சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது, ‘எக்ஸ்- ரே’ சோதனையில் அந்தப் பெண் தன் உடலுக்குள் ரகசியமாக 3 முட்டை வடிவ காப்ஸ்யூல்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவரது உடலில் இருந்து அந்த காப்ஸ்யூல்கள் வெளியே எடுக்கப்பட்டன. பின்னா், நவீன தொழில்நுட்ப முறையில் அவை பிரிக்கப்பட்டன. அதில் 1.08 கிலோ எடையுள்ள தங்கக் கட்டி இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அந்தத் தங்கத்தின் சா்வதேச சந்தை மதிப்பு ரூ.1.38 கோடி. இதையடுத்து அந்தப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.