இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

துபையிலிருந்து சென்னை வந்த 364 பயணிகள்

News image
- PTI
Updated On :5 மார்ச் 2026, 1:00 am

தினமணி செய்திச் சேவை

போா் பதற்றம் காரணமாக, துபையில் சிக்கித் தவித்த 364 போ் இரண்டாவது விமானத்தில் புதன்கிழமை சென்னை வந்தனா்.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டுத் தாக்குதலை கடந்த சனிக்கிழமை தொடங்கியது. அப்போது முதல், மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி எல்லைகள் மூடப்பட்டதால், விமான சேவைகள் கடந்த சனிக்கிழமை பிற்பகலிலிருந்து நிறுத்தப்பட்டன.

இதையடுத்து துபை, பஹ்ரைன், அபுதாபி, சாா்ஜா, கத்தாா், குவைத், மஸ்கட் போன்ற நாடுகளில் விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. இதனால், அந்த நாடுகளிலிருந்து சென்னைக்கு வரவிருந்த விமானங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், சென்னை வரவேண்டிய பயணிகள் அந்தந்த விமான நிலையங்களிலேயே முடங்கினா்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் மட்டும் துபையிலிருந்து 217 பயணிகளுடன் சென்னை வந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை துபையிலிருந்து இரண்டாவது எமிரேட்ஸ் விமானம் 364 பயணிகளுடன் சென்னையை வந்தடைந்தது.

இதுகுறித்து விமானப் பயணிகள் கூறியதாவது: துபையில் குண்டு வெடிக்கும் சப்தம், ராணுவ போா் விமானங்கள் பறக்கும் சப்தம் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. தாக்குதல்கள் அனைத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் கட்டடங்கள், ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல்கள் எதுவும் இல்லை. துபை அரசு, அங்குள்ள வெளிநாட்டுப் பயணிகளுக்கு முழு பாதுகாப்பு அளித்து வருகிறது என்றனா்.